Tuesday, March 29, 2011

பாவம்

புத்தன் பூமியில் எத்தனை உயிர்கள் 
செத்தது நமது ரத்தத்தின் ரத்தம் 
அத்தனை நடந்தும் ஈங்கென்ன செய்தோம் 
வாக்கைப் போட்டு வழக்கை முடித்தோம் 

 எட்டுக் கோடி இங்கே இருந்தும் 
எதிர்த்த வீட்டு நெருப்பை அணைக்க 
மனதில் கூட நினைக்க மறந்து 
மயிலும் மானும் ஆடக் கண்டோம் 

 வந்தவர் பல்கி வள்ர்ந்த தனால்முன் 
இருந்தவர் சுருங்கி எரும்பாய்ப் போக 
எல்லாம் எமக்கே என்றே சொன்னார் 
உலகும் அதற்கு உறுதுனை போச்சு 

அங்கே தமிழன் அடைந்தால் வெற்றி 
இங்கே தமிழன் எழுச்சி கொள்வான் 
என்றே எண்ணி இந்திய நாடும் 
இனக்கொ லைக்கு எதுகை செய்ய 

 தரணி வென்ற சோழன் போல 
தமிழைக் காக்க வந்த தலைவனை 
கட்ட பொம்மனின் எட்டப்பன் போல 
காட்டிக் கொடுத்தான் கருணா அம்மான் 

அய்யகோ என்ற அழுகுரல் கேட்டு 
ஐநா சபையும் அதிர்ந்தது லேசாய் 
இருந்தும் என்ன இந்திய தேசம் 
சைனா செய்த சதியில் வீழ்ந்தது 

 நன்றே எல்லாம் நடந்தது என்று 
நம்பி யாரும் நடித்தான் நன்றாய் 
பான்கீ மூனும் பல்லை இளித்தான் 
பாவம் செய்தான் கொடிய சாத்தான்.

No comments: