Wednesday, February 9, 2011

அழகு...

கு.முனியசாமி

துள்ளி ஓடும் மான் அழகு

துயில் கொள்ளும் சேய் அழகு

விண்ணிலே நிலவழகு

விதையிலே கருவழகு...

மண்ணிலே நதி அழகு

மனதிலே ஜதி அழகு

நதியிலே நீர் அழகு

நல்ல தோர் பேர் அழகு...

காலையில் இருள் அழகு

கவிதையில் பொருள் அழகு

வில்லுக்கு அம்பழகு

வில்லனுக்கு வம்பழகு

சொல்லுக்கு சுவை அழகு

சொல்லாமை ஓர் அழகு...

பெண்ணுக்கு நகை அழகு

பின்லேடனுக்கு குகை அழகு...

also in thinnai.com

http://www.thinnai.com/?module=displaystory&story_id=302032412&format=html

No comments: