Saturday, December 12, 2020

 தேர்தல் வருதுங்கோ

இன்னும் ஓர் சில மாதம்
இங்கே ஒரு தேர்தல் வரும்
எங்கேயும் இல்லாத
இம்சைகளும் கூட வரும்...
வெள்ளையர் கூட
நல்லவர் ஆவார் - இந்த
கொள்ளையர் முன்னாலே - அந்த
கூவமும் பின்னாலே...
பிரித்து ஆள ஒரு கூட்டம்
பெரும் சூழ்ச்சி செய்யுது
பேதம் சாதி என்று சொல்லி
பேயாட்டம் போடுது...
அடிமையாகி ஒரு கூட்டம்
அம்மணமாய் திரியுது
அடகுவைத்த நம் மானம்
அந்தரத்தில் தொங்குது...
ஆட்டு மந்தை காவலுக்கு
ஓநாய்கள் துடிக்குது
ஆந்தைகளும் கூகைகளும்
ஓலமிட்டு மிரட்டுது...
புதுப்புதுசா நரிகள் கூட்டம்
புறப்பட்டு வருகுது
போக்கத்த மனிதருக்குள்
பொய்மையை விதைக்குது...
வறண்டு விட்ட வானத்தில்
வல்லூறு பறக்குது
வஞ்சனைகள் பலசெய்து
வன்மத்தை விதைக்குது ...
எருக்கம் பூவுக்குள்
எண்ணெயைத் தேடுது
எட்டப்பர் கூட்டத்தை
ஏற்றிவிட துடிக்குது...
புல்லுருவிக் கூட்டம் ஒன்னு
பொய்மைக்கு மணி அடிக்கும்
நல்லருவி என்று சொல்லி
நாற்றத்தை விலை பேசும்...
கூத்தாடிக் கூட்டம் ஒன்னு
கொட்டம் அடிக்க வரும்
கோவணத்தில் கூட
ஆவணத்தை மறைத்து விடும்...
மணலை விழுங்கி விட்டு
மடைகட்ட நீர் தேடும்
அனலுக்குள் ஈரத்தை
அடைகாக்க துதி பாடும்...
வானரக் கூட்டம் - ஒன்னு
வாலை ஆட்டி வரும்
வன்மத்தை விதைத்து விட்டு
வானத்தை விலை பேசும் ...
வக்கற்ற மக்களின்
வாக்குக்கு விலை வைக்கும்...
வாய்ப்புகள் வந்து விட்டால்
வாட்டி வதை வதைக்கும்...
நாளும் பொழுதும் நம்மை
நசுக்கி ரணம் கொடுக்கும்
நல்லது வேண்டு மெனில்
நாம் தான் விழித்தெழனும்...
கவரிமான் இனத்தை
கயமை வந்து விழ்த்திடுமா
நற்றமிழ் நாட்டை - சிறு
நரிக்கூட்டம் ஆளனுமா...
உலகத்தை ஆண்ட இனம்
ஒன்றுபடும் நேரமிது
சதிகாரக் கூட்டத்தை
சத்தம் இன்றி வென்று விடு...
உன்னால் முடியும் என்று
உணர வேண்டும் நீ இன்று
நல்லவர் தேடி உந்தன்
நல்வாக்கைப் போட்டுவிடு...
இம்முறை தோற்று விட்டால்
இறைவனும் உனைக் காவான்
கண்கள் குருடானால் - நம்
கண்ணீரும் வீணாகும்...

No comments: